No results found

    திருப்பூரில் தண்ணீர் சுத்திகரிப்பு டீலர்ஸ் சங்கம் தொடக்க விழா


    திருப்பூர் மாவட்ட தண்ணீர் சுத்திகரிப்பு (ஆர்.ஓ.) டீலர்ஸ் சங்கம் புதிதாக தொடங்கப்பட்டு சங்க அலுவலகம் திருப்பூர் ஓம் சக்தி கோவில் எதிரே அமைந்துள்ளது. சங்க அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். தலைவராக ராஜகோபால், துணை தலைவராக குணமுகிலன், செயலாளராக மணிகண்டன், துணை செயலாளராக முகமது ஷரீப், பொருளாளராக நவநீதராஜா, துணை பொருளாளராக ஷக்கீர், நிர்வாகிகள் செய்யதப்ப நிஜாம், சங்கர் ஆகியோர் பொறுப்பேற்றார்கள். கூட்டத்தில், திருப்பூரில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிலில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. தொழிலை மேம்படுத்தவும், நெறிமுறைப்படுத்தவும், போலி உதிரிபாகங்கள் மற்றும் போலி நிறுவனங்களை தடுக்கவும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உதிரிபாகங்களுக்கான விலையை நிர்ணயம் செய்வது, உறுப்பினர்களுக்கு சங்கத்தின் சார்பில் சர்வீஸ் பை வழங்குவது, சங்க உறுப்பினர்களுக்கு காப்பீடு செய்தல் மற்றும் அடையாள அட்டை, தொழில் சார்ந்த உதவிகளை வழங்குவது, இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை சங்கத்தில் உறுப்பினராக சேர்ப்பது, உறுப்பினர்களிடம் சந்தா வசூலிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Previous Next

    نموذج الاتصال